• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

12 ஒக்டோபர் 1971 – ஐ.நா.பொ.சபை – சமாதான மண்டலம்

1971 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடு பொது சபையின் 26 வது அமர்வில் கலந்து கொண்ட திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இந்திய சமுதிரத்தை சமாதான மண்டலமாக பிரகடனம் செய்ய வேண்டுமென முன்மொழிந்தார். ஐக்கிய நாடு பொது சபையின் செயளாலர் நாயகமாகிய திரு. யு தானுடனும் இது சம்பந்தமான விடயங்களை அவருடன் நடத்திய பேச்சுவார்தையின் போது ஆராயப்பட்டது. இலங்கையும் டன்சானியாவும் இணைந்து கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை இன்னும் பல நாடுகள் ஆதரித்ததுடன் பரவலாக மிகுந்த ஆதரவு காணப்பட்டது. இந்த விடயம் சம்பந்தமாக பல சர்வதேச மேடைகளில் பேசப்பட்ட போதெல்லாம் இலங்கையும் இந்தியாவும் களைப்படையாமல் வாக்களிப்பதிலிருந்து விலகிய நாடுகளுடன் தொடர்பு கொண்டு ஆதரவை தேடியது.