• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

16 ஒக்டோபர் 1980 – குடியுரிமை அகற்றல்

1977 ஆண்டில் ஏற்பட்ட தேர்தல் தோல்வியின் பின், ஜயவர்தன அரசாங்கம் விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்ததுடன் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் பதவிக்காலத்தில் அதிகார துஸ்பிரயோகம் செய்யப்பட்டார் என ஆணைக்குழு தீர்பளித்ததின் பிரகாரம் அவருடைய குடியுரிமையையும் பாராளுமன்ற அங்கத்துவத்தையும் அகற்றப்பட்டது. அதேபோல் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த அமைச்சர் பிலீக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க அவர்களின் குடியுரிமையையும் நீக்கப்பட்டது. இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது 139 அங்கத்தவர்கள் பாராளுமன்ற அங்கத்துவத்தை நீக்கும் பிரேரனைக்கு ஆதரவாக வாக்களித்துடன் 19 அங்கத்தவர்கள் எதிர்த்து வாக்களித்தனர். திருமதி பண்டாரநாயக்க அவர்களுடன் அப்பொழுது எதிர்கட்சி தலைவரான அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரான முருகேசு சிவசிதம்பரம் அவர்களும் பாராளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதன் விளைவாக அவருக்கு அரசியலில் மும்முரமாக ஈடுபடுதற்கு முடியாமல் போயிற்றது.