Monthly Archives: ஜனவரி 1963

12 ஜவனரி 1963 – கொழும்பு மாநாட்டின் ஆலோசனைகளுக்கு இந்தியாவுடன் உடன்பாடு தேடுதல்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவும் பதற்ற நிலமையை தீர்பதற்க்கு கொழும்பு மகாநாட்டின் போது எடுக்கப்பட்ட யோசனைகளுக்கு இந்திய பிரதமர் ஜவஹல்லாற் நேருவின் உடன்பாட்டை எதிர்பார்த்தார். “யுத்தத்தினால் எந்த பிரச்சினையும் தீர்க்க படுவதில்லை என்பது சரித்தரத்தில் கற்றுக்கொண்ட பாடம் என நான் நினைக்கிறேன். யுத்தம் மேலும் பல பிரச்சினைகளையே உருவாக்கும்”-என்று திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இதன் போது கருத்து தெரிவித்தார்.

08 ஜனவரி 1963 – கொழும்பு மாநாட்டின் ஆலோசனைகளுக்கு சீனாவுடன் உடன்பாடு தேடுதல்

கொழும்பு மகாநாட்டின் ஆழ்ந்தாராய்வின் யோசனைகளை சீன அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்காக திருமதி பண்டாரநாயக்க அவர்கள் சீனாவுக்கு சென்றார். அங்கு அவர் உடன்பாடான பதில்களை பெற்றது மட்டுமல்லாமல் ஒரு அமைதியான தீர்வொன்றுக்காக பண்டாரநாயக்க அவர்கள் எடுக்கும் முயற்ச்சிக்கு சீனா தனது நன்றிக்கடனையும் தெரிவித்தது. பான்டுங் கொள்கைகளை திரும்பவும் உறுதிசெய்வதற்கு இந்த விஜயம் ஓர் சந்தர்பமாக அமைந்ததுடன் இக்கொள்கைகளையும் பான்டுங் மனப்பான்மையை பின் பற்றி இந்த பிரச்சினை மட்டுமல்லாது இப்பிராந்தியத்தில் உருவாகும் எல்லா பிரச்சினைகளையும் சமாதானமாகவும் விரைவாகவும் தீர்வு காண முடியுமென