Monthly Archives: ஏப்ரல் 1973

27-29 ஏப்ரல் – இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் விஜயம்

திருமதி பண்டாரநாயக்க அவர்களின் நெருங்கிய நண்பராக கருதப்படும் இந்திய பிரதமர் இந்திரா காந்தி 1973 ஆம் அண்டில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது இலங்கை பாராளுமன்றத்திலும் உரை நிகழ்த்தினார். பலதரப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக விரிவான கருத்து பரிமாறப்பட்டதுடன் முக்கியமாக எஞ்சிய இந்திய வம்சாவழி 150,000 மக்களின் பிரஜாயுரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை, இரு நாடுகளிடையே கடல் எல்லைகள் மற்றும் கச்சுதீவின் உரிமை பற்றிய விடயங்கள் என்பன ஆராயப்பட்டது.