Monthly Archives: ஜூன் 1975

18 ஜூன் 1975 – பெண்கள் சம்பந்தமான உலக மாநாடு, மெக்சிகோ

திருமதி பண்டாரநாயக்க அவர்களின் முதல் தெரிவின் பதினைந்து வருடங்களுக்கு பின் மெக்ஸிக்கோவில் நடைப்பெற்ற ஐக்கிய நாடு சபையின் பெண்கள் சம்பந்தமான அனைத்துலக மாநாட்டில் உலகத்தின் முதல் பெண் பிரதமர் என்ற வகையில் பிரதம உரையை நிகழ்த்தினார். “இங்கு நாங்கள் வேற்றுமைகளை அகற்றுவதில் மாத்திரமின்றி மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு புறக்கணிக்கப்பட்ட மனித இனத்தின் அரைவாசி பேர்களுடைய பங்களிப்பபையும் ஒன்றினைப்பதில் செயற்பட்டுவருகின்றோம்” என்று பெண்களின் பாத்திரத்தையும் அவர்களுடைய பங்களிப்பை பற்றியும் பேசிய பொழுது திருமதி பண்டாரநாயக்க அவர்கள் கருத்து தெரிவித்தார். மெக்சிகோ

10 ஜூன் 1975 – உலகத் தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டத்தொடர், ஜினிவா

அனைத்துலக மகளிர் வருடத்தில் நடைப்பெற்ற உலகத் தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டத்தொடரிலே பிரதம விருந்தினராக கலந்துகொண்ட திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மனித முன்னேற்றத்தில் பெண்களின் பங்கை பற்றி மிகவும் அக்கறை கொண்டவராக இருந்தார். பொதுச்சபையில் பிரதான உரையை நிகழ்த்திய அவர், சமாதானம், நீதி மற்றும் சமத்துவம் அகியவற்றின் முன்னேற்றம் தொடர்பாக புதிய அர்பணிப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார். சுவிட்ஸார்ந்தில் தங்கியிருந்த பொழுது 77 குழுவு முன்னிலையிலும் உரை நிகழ்த்தினார்.