1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கம் ஒரு வாக்கு குறைவினால் தோற்கடிக்கப்பட்டு பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சங்க நடவடிக்கைகளால் ஏற்படுத்திய அரசியல் ஸ்த்திரமற்ற நிலையை கையாளும் வகையிலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட சதி முயற்ச்சியையும் கவனத்தில் கொண்டு 1964 ஆம் ஆண்டு முதல் பகுதியிலே இடதுசாரி கட்சிகளையும் அரசாங்கதிற்குள்ளே கொண்டுவந்தார். இதன் மூலம் அதிருப்த்தியடைந்த சில அரசாங்க பாராளுமன்ற அங்கத்தவர்கள் எதிர் கட்சிகளுடன் சேர்ந்து அரசாங்கதிற்கு எதிராக வாக்களித்தமையால் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன் பிரதமர் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் முதல் காலவரை முடிவுக்கு வந்தது.