Author Archives: kosala

Vipassana Meditation Centre

11th Commonwealth Prime Ministers’ Conference

Sworn in as a senator

Assassination of Prime Minister Bandaranaike

Joined the Lanka Mahila Samithi

Marriage to S.W.R.D. Bandaranaike

Birth of Sirimavo Ratwatte

26 ஜூன் 1974 – இலங்கை கச்சிதீவை பெறுதல்

பிரதமர் இந்திரா காந்தியுடன் நடத்திய மும்மரமான பேரப் பேச்சின் பின் இரு நாடுகளுடையே சர்ச்சைக்குள்ளாயிருந்த கச்சிதீவு இலங்கையின் கடற் எல்லைக்குள் இருப்பதென இறுதியாக தீர்மானம் எடுக்கப்பட்டபின் கச்சிதீவின் உரிமை இலங்கைக்கென ஏற்றுக்கொள்ளப்பட்டது. பலரால் தீர்பதற்கு முயற்சித்து முடியாமல் போன இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்த்து இது சம்பந்தமாக இரு பிரதமர்களிடையே உடன்படிக்கையும் கைசாத்திடப்பட்டது.

08 ஜனவரி 1963 – கொழும்பு மாநாட்டின் ஆலோசனைகளுக்கு சீனாவுடன் உடன்பாடு தேடுதல்

கொழும்பு மகாநாட்டின் ஆழ்ந்தாராய்வின் யோசனைகளை சீன அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்காக திருமதி பண்டாரநாயக்க அவர்கள் சீனாவுக்கு சென்றார். அங்கு அவர் உடன்பாடான பதில்களை பெற்றது மட்டுமல்லாமல் ஒரு அமைதியான தீர்வொன்றுக்காக பண்டாரநாயக்க அவர்கள் எடுக்கும் முயற்ச்சிக்கு சீனா தனது நன்றிக்கடனையும் தெரிவித்தது. பான்டுங் கொள்கைகளை திரும்பவும் உறுதிசெய்வதற்கு இந்த விஜயம் ஓர் சந்தர்பமாக அமைந்ததுடன் இக்கொள்கைகளையும் பான்டுங் மனப்பான்மையை பின் பற்றி இந்த பிரச்சினை மட்டுமல்லாது இப்பிராந்தியத்தில் உருவாகும் எல்லா பிரச்சினைகளையும் சமாதானமாகவும் விரைவாகவும் தீர்வு காண முடியுமென

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start blogging!

14 ஒக்டேபர் 2000 – கடைசி பயனம்

திருமதி பண்டாரநாயக்க அவர்களின் இறந்த செய்தி உலக ஊடகங்களில் தலமை செய்திகளாக வந்தது. உலகமெங்கும் மக்கள் இப்பிடியான முன்மாதிரியான தலைவர் ஒருவரை இழந்த சோகத்தில் துயரப்பட்டு கொண்டிருந்தனர். பெண்களின் விமோசனத்திற்கு வழிவகுத்து, அணிசேரா கொள்கைகளை பேணி பாதுக்காத்து மேம்படுத்தி மற்றும் அபிவருத்தியடைந்து வரும் நாடுகளின் பிரச்சினைகளை உலகதிற்கு கோடிட்டு காட்டிய ஒரு மாபெரும் தலைவியின் மறைவினால் உலகம் சோகத்தில் வாடியது. ஹோரகொல்லையிலுள்ள அவரது கணவரான மறைந்த எஸ்.டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க அவர்களின் சமாதி அருகில் இவரின் பூதவுடலை வைக்கும்

10 ஒக்டேபர் 2000 – ஒரு யுகத்தின் முடிவு

2000 ஆம் நடைப்பெற்ற பொது தேர்தலில் நிட்டம்புவ சங்க போதி மகா வித்தியாலயத்தில் வாக்களித்து விட்டு தனது கடைசி குடியுரிமை கடமையையும் செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அமைதியான முறையில் இறந்தார். பொது சேவைக்கு அர்பனித்த ஒரு தனிசிறப்பான வாழ்க்கை இவ்வாரு முடிவுக்கு வந்தது.

10 ஆகஸ்ட் 2000 – பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தல்

சுகயீனம் காரணமாக, திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து அரசியலில் இருந்து விலகியிருக்க விருப்பபட்டார். 84 வயதில் பிரதமர் பதவியிலிருந்து விலகும் போது அவர் உலகத்திலேயே அதிக வயதுடைய பிரதமராக இருந்ததுடன் அவருடைய நான்கு தசாப்த அரசியல் வாழ்கை முடிவுக்கு வந்தது. இந்த காலத்தினுள் அவர் அரசியலில் உச்ச நிலையடைந்து மூன்று முறை பிரதமர் பதவியைடைந்ததுடன் இரண்டு முறை எதிர்கட்சி தலைவராகவும் கடமையாற்றினார்.

14 நவெம்பர் 1994 – ஜனாதிபதி தேர்தல்

பொதுத் தேர்தல் நடப்பெற்று சில மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் 1994 நவெம்பர் மாதத்தில் நடாத்தப்பட்டது. திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் 62% வாக்குகளை பெற்று அமோக வெற்றி ஈட்டியதுடன் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து ஜனாதிபதியாக பதவியேற்றார். திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றார். 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இராஜினாமா செய்யும் வரை இந்த பதவியை வகித்தார்.

19 ஆகஸ்ட் 1994 – அமைச்சு கடமையற்ற அமைச்சர்

1994 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற பொதுதேர்தலில் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்கள் அமோக வெற்றியடைந்து 48.94% வாக்குகளை பெற்று அரசியலில் முதன்மைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கொண்டுவந்ததுடன் கூட்டமைப்பின் பிரதான கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி திகழ்ந்தது. அரசாங்கத்தில் மூத்த அரசியல்வாதியான திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அமைச்சு கடமையற்ற அமைச்சர் என ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க முன்னிலையில் சத்தியபிரமானம் செய்தார். அதனை அடுத்து அவருடைய மகள் திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க

11 ஜூன் 1994 – பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிலையம் நிறுவுதல்

தொழில் ரீதியாக வெளிவிவகார சேவையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இராஜதந்திர (தூதர்) பயிற்சி நிலையம் ஒன்று நிறுவதற்கு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார். இதற்காக, திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இலங்கையில் முதல் வெளிவிவகார சேவையில் ஈடுபட்ட மூத்த தொழில் ரீதியான தானாதிபதியான கலாநிதி வர்னன் எல்.பி. மென்டிஸ் அவர்களுக்கு அதிகாரமளித்து அதில் பணிப்பாளர் நாயகமாக ஈடுபடச் செய்தார். இந்த நிறுவனம் இன்று செயற்பரப்பில் வளர்ச்சியடைந்து இதன் பல பாடத்திட்டங்களுக்கும் நிகழ்ச்சி

09 மார்ச் 1989 – இரண்டாவது முறையாக எதிர்கட்சி தலைவர் பதவி

பாராளுமன்றத்திற்கு தெரிவானதிற்கு பிறகு 1989 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் பாராளுமன்றம் கூட்டப்பட்ட போது திருமதி பன்டாரநாயக்க அவர்களை எதிர்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 1994 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ம் திகதி பாராளுமன்றம் கலைக்கும் வரை இந்த பதவியை வகித்தார்.

15 பெப்ரவரி 1989 – பொதுத்தேர்தலில் தோல்வி

1988 ஆம் ஆண்டில் டிசெம்பர் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்த பின்பு, 1989 ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தலைமை தாங்கி தேர்தலுக்கு முகம்கொடுத்து 67 தொகுதிகளை மட்டும் பெற்று பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியின் தலைவியாக அமர்ந்தார்.

19 டிசெம்பர் 1988 – ஜனாதிபதி தேரதலில் தோல்வி

முதல் முறையாக 1988 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் போட்டியிட்டார். அவருடைய நிலைபாட்டடை தெளிவாக அறிவித்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்ததிற்கும் அரசியலமைப்புக்கு மேற்கொண்ட 13 வது திருத்தம், இந்திய இரானுவம் இலங்கையில் தங்கியிருந்தல் மற்றும் அரசியல் எதிரிகளை பலிவாங்குதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவைக்கு எதிராக பிரசாரம் செய்தார். திருமதி பண்டாரநாயக்க அவர்கள் 2,289,860 வாக்குகள் பெற்று மொத்த வாக்குகளில் 44.9மூ பெற்றார். எவ்வராயினும், 50.4மூ வீதம் வாக்கு

13 நவெம்பர் 1988 – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடல்

1988 டிசெம்பர் 19 திகதியில் ஜனாதிபதி தேர்தல் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்ததுடன், திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தனது வேட்பு மனுகளை சமர்பித்ததுடன் முதல் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிட்டம்புவையில் ஆரம்பித்து வைத்தார். திரும்பவும் பிரதான அரசியலுக்கு பிரவேசித்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் நாடு பூராவும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுப்பட்டார். இந்த ஜனாதிபதி தேர்தல் களத்தில் இவருடன் மூன்று வேட்பாளர்கள் இருந்ததுடன் மற்றைய வேட்பாளர்களில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரனசிங்க பிரேமதாசவும் ஸ்ரீ லங்கா மகாஜன